மீண்டும் ஆரம்பத்தில் இருந்தாஆஆஆ?

இரண்டு நாட்களாக சொகுசுப் பேரூந்தில் ஒரு நகரத்திற்குச் சென்று வர வேண்டியிருந்தது. மாலை ஏறினால் காலை பயணம் முடிவடையும். ஏறத்தாள 10 மணி நேரப் பயணம்.

சிவனே என்று 80களின் காதற்பாடல்களுடன் என்னை மறந்திருந்தேன். தலையில்மாட்டியிருந்த headphoneக்குள் ஒரு விதமான ஒலி வரத்தொடங்கியது. சற்று நேரத்தில் அந்த ஒலியின் இம்சை தாங்கமுடியாது போகவே headphone களற்றினேன். அப்பொது அந்த ஒலி எனக்கு பின்னாலிருந்த ஆசனத்தில் இருந்து வந்துகொண்டிருந்தது.

திரும்பிப் பார்தத்தேன். ஒரவா் தனது வாயைப் பிளந்துவிட்டபடியே கச்சேரி செய்துகொண்டிருந்தார். அவரின் தொண்டைக்குழியின் ஆரம்பத்தில் உள்நாக்கு பயங்கரமாய் அதிர்ந்துகொண்டிருந்தது. நான் சற்று எட்டிப்பார்த்திருந்தால் இரைப்பையும் தெரிந்திருக்கும்.

அன்றைய இரவினைப் பொன்றதொரு சித்திரவதையான இரவினை நான் அனுபவித்ததில்லை. சில நேரங்களில் உயிர்பிரிவது போலான அதி பயங்கர ஒலிகளையும் எழுப்பினார்

அது ஒரு அதி பயங்கர இரவு.

எனது headphone வெளியில் இருந்து வரும் ஒலிகளை தடைசெய்யும் தன்மையுடையது. அவருடைய உயிரின் ஒலி அதையும் கடந்து வந்து எனது காதைக் குடைந்துகொண்டிருந்தது.

ஒரு முறை சாரதியும் அவரை எழுப்பி நீங்கள் அனைவரினதும் நித்திரையை குழப்புகிறீகள் என்றார். 2 நிமிடங்கள் அமைதியானவா் அதன் பின்  முன்பைவிட  அதிபயங்கரமாக வாசித்தார்.

என் பொறுமை காற்றில் பட படத்துக்கொண்டிருந்தது. கையில் மண்ணெண்ணையும் நெருப்பெட்டியும் இருந்திருந்தால் அவரின் வாய்க்குள் ஊற்றி தட்டிவைத்திருபேன். அந்தளவுக்கு கடுப்பேத்தினார் அவா்.

காலையில் என்னைப்பார்த்து இரண்டு கேள்வி கேட்டார்
நன்றாக உறங்கினீா்களா?
பயணம் சுகமாக இருந்ததா?

அதுதான் அன்றைய நாளின் அதிபயங்கரமைான கொடுமை.

சென்ற வேலையை முடித்தபின் மீண்டும் சொகுசுப் பேரூந்தில் ஏறிக் குந்தியிருந்து, பாடலின் இனிமையில் உறங்கிப்போனேன்.

திடீா் என முழிப்பு வந்தது. நேற்றைய இரவின் ஒலி பின்னால் இருந்து வந்துகொண்டிருந்தது.

திரும்பிப்பார்த்தேன். திறந்திருந்ததொண்டைக் குழியின் ஊடாக குதம்வரை தெரிய நேற்றைய மனிதரை கொன்றுதின்ற மனிதா் ஒருவா் குறட்டைவிட்டுக்கொண்டிருந்தார்
 

வடிவேலுவின் ”மீண்டும் ஆரம்பித்தில் இருந்தா?” என்று டயலாக் காதில் அசரீரியாய் ஒலித்தது.

1 comment:

  1. ஹா ஹா ஹா... இரவுப் பயணம் சில நேரங்களில் நரகமாவதும் உண்டு...

    ReplyDelete

பின்னூட்டங்கள்