அண்ணை! மீண்டும் முருக்கைமரத்தில் ஏறாதீங்கோ - வ. ஜ. ச ஜெயபாலனுக்கு இரண்டாவது பகிரங்கக் கடிதம்

அண்ணைக்கு  இன்னுமாரு வணக்கம்!

உங்களின் முகப்புத்தக நண்பர்கள் எதிர்பார்த்தது போலவும் நான் எதிர்பார்த்தது போலவும் நீங்கள் இம்முறையும் உங்களின் அறிக்கைகளை கோழைபோன்று அழித்துவிட்டீர்கள்.
உங்களின் புழுகுமூட்டைகளுக்கு காட்டமான பதில்கள் மற்றும் உங்களை திணறவைத்த, பதில்சொல்ல முடியாத கேள்விகளை கேட்கும்போது உங்களின் தாக்குதல் அறிக்கைகளை அழித்துவிட்டு சமரசக் கரங்களை உங்களுக்கு சாதகமான முறையில் உயர்த்தியபடி ”இனி பேச ஒன்றும் இல்லை, கொளரவமாக விலகிக்கொள்வோம்” என்று அறிக்கைவிட்டிருக்கிறீர்கள்.

நான் கேட்ட ஒரு கேள்விக்கும் உங்களால் பதில்சொல்ல முடியவில்லையே. பிறகு எப்படி நாம் கொளரவமாக விலகிக்கொள்வது?

இத்துடன் உங்கள் ”தோழமையுடன் ஒரு குரல்” புத்தகத்தை எழுநா வெளியிட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரமாக புகைப்படத்தினையும் இணைத்திருக்கிறேன். விரும்பினால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதை இவ்விடத்தில் நிறுத்திக்கொண்டு, அடுத்த விடயத்துக்குப் போவோம்.

இன்று யாழ் இணையத்தில் இருந்த உங்களின்  பதிவில் இருந்த வசனங்களை இங்கு தருகிறேன்

//பனையால் விழுந்த என்மீது சஞ்சயன் போன்றோர் ஓயாமல் தொடுத்த தாக்குதல்களால் சினப்பட்டு  ^^மறைமுக அரசு ஆதரவாளர்களரும் கோமாளியுமான சஞ்சயன்^^ என்று எழுதியமைக்கு வருந்துகிறேன்.//

அண்ணை! யாரவது ஒரு பெருமரியாதைக்குரிய ஒரு மனிதர் நீங்கள் கூறியதை எனக்குக் கூறியிருந்தால் நான் மனவருத்தப்பட்டிருப்பேன். கூறியது நீங்கள்தானே. எனவே மனவருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. கவலைப்படாதீர்கள். Take it easy அண்ண‌ை.

தவிர,  இன்றைய உங்களின் பின்வாங்கல் அறிக்கையில் பனையால் விழுந்த உங்களை நான் ஓயாமல் தாக்கினேன் என்றிருக்கிறீர்கள் அல்லவா. அண்ணை! சத்தியாமாக உங்களுக்கு வயதாகிவிட்டதால் அடிக்கடி நினைவுதப்புகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நான் எங்கே, எப்போது, எப்படி உங்களை ஓயாமல் தாக்கினேன் என்பதை சற்று விளக்கமாக, ஆதாரங்களுடன் கூறமுடியுமா?

ஒரு உண்மை தெரியுமா அண்ணை! உங்களின் ‌கைதுபற்றி, உங்களை விமானநிலையத்தில் இருந்து அழைத்துவந்த நோர்வேஜிய நண்பரிடம் யார் சொன்னது என்று அவரிடமே கேட்டுப்பாருங்கள்.

உங்களுடன் தொலைபேசியில் உரையாடி,  அவருக்கு  தொடர்ந்தும் உங்களின் நிலமைபற்றி தினமும் அறிவித்தது யார் என்று கேளுங்கள். இதை உங்களின் பாரியாரும் அறிவார்.

இலங்கையில் உள்ள நோர்வேஜிய தூதுவருக்கு செய்தியை அறிவித்தவர் யார் என்பதையும் கேட்டுப்பாருங்கள். அதன் பின்புலத்தில் யார் இருந்தார்கள் என்றும் கேட்டுப்பாருங்கள்.

நோர்வேயில் உள்ள சில முக்கிய தமிழர்கள் மூலம் நீங்கள் வாய்கிழியக் கிழியக் பாராட்டும் உங்கள் நண்பர் ஏரிக் சூல்ஹைம் அவர்களுக்கு செய்தி அனுப்பியது யார் என்றும் விசாரியுங்கள்.

நீங்கள் நோர்வே வந்திறங்கியபோது உங்களின் தமிழ் நண்பர்கள் யாராவது அங்கிருந்தார்களா? உங்களின் பாரியாரும், அந்த நோர்வேஜிய நண்பரும், நானும் தான் அங்கிருந்தோம். இதை உங்களால் மறுக்கமுடியுமா?

இவ்வளவும் கவிஞன் ஜெயபாலன் மீது இருந்த மரியாதையின் காரணமாகவே செய்யப்பட்டது. உங்களின் திருகுதாளங்கள், சில்மிசங்கள் என்பவற்றை ஊரே அறியும். இருப்பினும் உங்கள் கவிதைமேல் ஒரு மரியாதை இருந்தது. உங்களிடமும் மரியாதை இருந்தது.

ஆனால் இப்போது உங்களைப்பற்றி ஒருவித மரியாதையான எண்ணமும் இல்லை. உங்களுடன் அறிமுகமானதையிட்டும் வெட்கப்படுகிறேன்.

நீங்கள் ஒரு போலியான சமூகப்போராளி என்பதை நீங்களே உங்கள் அறிக்கைகள் மூலம் உலகத்துக்கே எடுத்துக்கூறியிருக்கிறீர்கள்.

உங்களைப்போன்ற பிரபல்யம் மீது தீராக் காமம் கொணடவர்கள் எங்கள் சமூகத்தின் சாபங்கள்.

தேவை ஏற்படின் மட்டக்களப்பில் இருகைகளையும் இழந்த ஒரு போராளிக்கு நோர்வே அரசின் உதவியுடன் கைகளைபூட்டித்தருகிறேன் என்று நீங்கள் பிலிம் காட்டியதைப்பற்றியும் நாம் பொதுவெளியில் பேசிக்கொள்வோம்.

உங்கள் வில்லத்தனங்களை திரைப்படத்துறையுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் எங்கள் சமூகத்தை உங்களின் வில்லத்தனத்திற்கு ஆடுகளமாக்காதீர்கள்.



நன்றி

தோழமையுடன்
சஞ்சயன்

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்