ஒரு கோயில் ஒரு மோதகம் ஒரு ராப்பிச்சை இவற்றுடன் மேற் சட்டையின்றி செக்சியாக .....

நண்பர் Ranjakumar Somapala S  தனது முகப்புத்தகத்தில்,   

மோதகம் சாப்பிட Sanjayan Selvamanickam போல குளித்து முழுகி, வேட்டி கட்டி, அங்கவஸ்திரம் தரித்துக்
கோயிலுக்குப் போகத் தேவையில்லை.

அவுஸ்திரேலியா நோர்வேயை விட நல்ல நாடு”
என்று அறிக்கை விட்டிருக்கிறார்.  


அவரின் சரித்திரமுக்கியத்துவம்வாய்ந்த அறிக்கைக்கு Sanjayan Selvamanickam ஆகிய நான் வழங்கும் பதில் அறிக்கை இது.
 ---------------------------------


Ranjakumar Somapala S நேற்றையுடன் பிள்ளையார் கதை முடிந்துவிட்டது என்று பயங்கர பீலிங்ஸ்ல இருக்கிறேன். வேணா.... நான் பாவம் அண்ணே.

அது சரி .. நான் குளித்து முழுகி, வேட்டி கட்டி, அங்கவஸ்திரம் தரித்துக் கோயிலுக்கு கோயிலுக்கு செல்கிறேன் என்றெல்லாம் நீங்களே முடிவு எடுக்கிறீங்க ... நாங்கெல்லாம் அதிகமான நேரங்களில் குளித்து, வேட்டி கட்டி, அங்கவஸ்திரம் தரித்துக் கோயிலுக்கு செல்வதில்லை.

நான் கோயிலுக்கு வருகிறேன் என்று பிள்ளையார் அறிந்தால் அவரே தனக்கு படு பயங்கரமாக அபிஷேகத்தை ஒழுங்குசெய்து கொள்கிறார். அந்த அபிஷேகத்தின் போது அவருக்கு நீராட்டம், பாலாபிஷேகம், தேன்அபிஷேகம், ப(ழ)ல smoothie அபிஷேகங்கள் நடக்கும். அப்புறம் செம செக்சியாக வேட்டி, அங்கவஸ்திரம் அணிந்து அங்கு வரும் பல பக்தகேடிகளுக்கு அருள்வளங்குவது போல சீன் போடுவார் அவர்.

நம்மூரில் இரவுநேரத்தில்தான் பூஜை ( I mean சுவாமிக்கு செய்யும் பூஜை). நான் சாப்பிட மட்டுமே அங்கு செல்வேன். அதாவது பூஜைமுடிந்து 15 நிமிடத்தின்பின். அப்போதுதான் சாப்பாடு தயாராக இருக்கும். ஆனால் பக்தர்கள் சாப்பிடத்தொடங்கியிருக்கமாட்டார்கள்.

இப்போதெல்லாம் ”எங்கே அந்த ராப்பிச்சை” என்று பக்கதர்கள் கேட்குமளவுக்கு நான் பிரபல்யம் அடைந்திருக்கிறேன். குழந்தைகள் என்னை மோதக மாம்ஸ் என்று அழைக்கிறார்கள். விடுமுறையின் போது வாங்கிவந்த காஸ்ட்லியான புடவைகளை கட்டிவரும்ஆன்டிமார் பாவம் இந்த அழகான இளைஞன் என்று கடைக்கண்ணால் பார்க்கிறார்கள் (பிள்ளையார் குமட்டுக்குள் சிரிக்கிறார்). கோயில் ஜயா இராப்பிச்சைக்காக தனியே ஸ்பெசலாக மோதகம் தொடக்கம் பஞ்சாமிர்தம்வரை எடுத்து வைக்கிறார். சிலவேளைகளில் வீட்டுக்கு கொண்டுசெல்ல கட்டியும் தருகிறார். சாப்பிட்டு முடிந்ததும் பால் டீ வேறு தருகிறார்கள்.

இந்த பால் டீ போடுபவர்பற்றி ஒருசுவையான கதையிருக்கிறது. டீ போடுபவர் Mr & Mrs சிவபெருமானின் இளைய மகனாகிய முருகனின் பிரதரில் படுபயங்கரமான பக்தர். இடுப்புக்கு மேல் ஒரு சிறு துணியும் இன்றி படு செக்சியாக நிற்பார். அவரளவுக்கு என்னால் மேலாடை இன்றி, அதுவும் பல ஆன்டிமார் முன்னிலையில் எனது one packஐ காட்டியபடி நிற்பது கூச்சமாய் இருக்கிறது. அவருக்கும் one bag மன்னிக்கவும் one packதான் ஆனாலும் மனிதர் நெஞ்சை திறந்துகாட்டிக்கொண்டு‌ செம செக்சியாக நிற்பார். இவருக்கு முன்று முறை heart attack வந்திருக்கிறது. பல பல தாக்குதல்களை (attack) சமாளித்தவர் என்பதால் நான் அவரை கேர்னல் என்று அழைக்கத்தொடங்கியிருக்கிறேன். கோர்னல் எவருக்கும் பயப்படமாட்டார் திருமதி கேர்னலைத்தவிர்த்து. கோனலும் நானும் படு பயங்கரமான நண்பர்ளாகிவிட்டோம். நேற்று ஒரு பெட்டி நிறைய மோதகத்தை எனக்காக ஒளித்துவைத்திருந்தார் என்றால் பாருங்களேன்.

சரி மீண்டும் எங்கள் கதைக்கு வருவோம்..

ஆரம்பத்தல் மோதகம் மட்டுமே கிடைத்தது. இப்போது நான் வீடுசெல்லும் போது வடை, தோசை, சம்பல், கடலை, சுண்டல், சாதம், பொங்கல் என்று என்னால் தூக்கமுடியாத அளவுக்கு ராப்பிச்சை போடுகிறார்கள். சாமி சத்தியமாக என் வீட்டில் சமைத்து ஒரு மாதமாகிவிட்டது.

இவ்வளவு வசதி உங்கள் ஊரில் இருக்கிறதா? இரண்டு நாட்களுக்கு முன் செய்து, காய்ந்து கருவாடாய்ப்போன மோதகத்தை பல டாலர்கள் ‌கொடுத்து கடையில்வாங்கிவிட்டு, இலங்கையில் மனிதவுரிமை மீறல் நடைபெறவே இல்லை என்று கூறும் மேர்வின் டீ சில்வாவைப் போல ”அவுஸ்திரேலியா நோர்வேயை விட நல்ல நாடு” என்று அறிக்கை விடுகிறீர்கள்.

அண்ணை!  நீங்கள் அறிக்கைவிடப்படாது. அப்புறம் என்னவாகும் என்று தெரியும்தானே (அட ....  அடுத்த பதிவுக்கு தலைப்புகிடைத்துவிட்டது)

பி.கு: இதை எழுதும்போது 3 மோதகங்கள் சாப்பிட்டேன். இன்னும் 7 - 8 சேமிப்பில் இருக்கிறது.

எப்பூடீடீ?

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்