1924 இல் எழுதப்பட்ட ”போலித் தேசியக் கதை”

எனது ஒஸ்லோ முருகன் சத்தியமாக, தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் “உலகம் பலவிதம்” என்னும் நூலில் 130ம் பக்கத்தில் உள்ள ஒரு சிறு கதையை கீழே பகிர்ந்துள்ளேன்.
***

உலகம் பலவிதம்: 1924 ஜூலை 17

ஒரு மரத்திலே நீண்ட கயிற்றினாற் கட்டப்பட்ட ஒட்டகம் அக்கயிறு அவிழ்ந்துவிட, அதனையும் இழுத்துக்கொண்டு செல்வதை ஒரு எலி கண்டது. கண்ட எலி ஒட்டகம் வழிதெரியாது அலைகின்றதென நினைத்து அக்கயிற்றின் நுதியைத் தன் வாயிற் கௌவிக்கொண்டு முன்னே சென்றது. எலி கயிற்றைக் கௌவிக் கொண்டு தன்னை வழிநடத்திச் செல்வதாக எண்ணி முற் செல்வதையுணர்ந்த ஒட்டகம் தனக்குட் சிரித்துக்கொண்டு பின்னே போகும் போது ஒரு ஆறு குறுக்கிடுதலும் எலி செய்வ தின்னதென்றறியாது ஒட்டகத்தைத் திரும்பிப் பார்த்தது. அப்பொழுது ஒட்டகம் சிரித்து “அண்ணே, ஏன் நிற்கின்றாய், இதுவரையும் என்னை வழிநடத்தியதுபோல் இனியும் வழிநடத்திச் செல்லலாமே” என்றது. உடனே, எலி தன் சிறுமையை உள்ளபடியுணர்ந்து நாணமடைந்து கயிற்றை விடுத்து அப்புறமகன்றது. இந்த எலியைப்போன்ற மனுஷர்களுஞ் சிலர் இருக்கின்றார்கள். பெருங்கருமங்களில் அழைப்பாரின்றித் தாமாகச் சென்று தலையிட்டுக்கொண்டு, தம்மாலேயே அக்கருமம் நடைபெறுவதாக வீணெண்ணங் கொள்ளுகின்றார்கள். அக்கருமங்கட்கு யாதும் சங்கடமேற்படும்போதே கருமத்தின் பெருமையும் இவர்களின் சிறுமையும் புலப்படும்.

***

இக்கதை இன்றைய புலம்பெயர் போலிகளையும், மிக முக்கியமாக ஒஸ்லோ தமிழரின் அரசியலையையும் உங்களுக்கு நினைவூட்டினால் அதற்கு ஆச்சிரமம் பொறுப்பல்ல.


டொட்.


#உலகம்_பலவிதம்

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்