பீரங்கி வாசலில் வீடு கட்டாதீர்கள்

எனக்கு சவரம் செய்வது என்பதானது திருவிழாபோன்றது.
கூரிய சவரக்கத்தி, வாசனையான சவர்க்காரம். சவர்காரத்தை முகம் எங்கும் வெள்ளையடிக்கும் சிறு தும்புத்தடி, ஆப்டர் சேவ் வாசனத்திரவியம். கிறீம் ஆகியன எனது திருவிழாப்பொருட்கள்.
என்னிடம் இருந்த, சவர்க்காரத்தை முகம் எங்கும் வெள்ளையடிக்கும் சிறு தும்புத்தடி பழுதடைந்ததால் அதை நேற்று எறிந்துவிட நேர்ந்தது.
இன்று அப்படி ஒன்று வாங்குவதற்காய் கடைக்கு அலைந்தேன். பல கடைகளிலும் இருக்கவில்லை.
சற்று அலைச்சலின் பின் ஒரு கடையில் மிக அழகானதொன்று இருந்தது. மனதுக்கு அதன் அழகும், தும்புகள் வெட்டப்பட்டிருந்த விதமும் பிடித்துக்கொண்டதால் கையிலடுத்துச் சென்று பணம் செலுத்த முற்பட்டேன்.
”வணக்கம், நத்தார் பரிசா இது?” என்றார் விற்பனையாளினி.
”இல்லை, இது அடியேனுக்கு” இது நான்.
”உங்களுக்கா? என்றுவிட்டு நிமிர்ந்து பார்த்தார்”
”எனக்கு தலையில்தான் முடியில்லை. ஆனால் முகத்தில் இருக்கிறது. இது சவரம்செய்யும்போது பாவிப்பதற்கு”
சிரிப்பை அடக்கியபடியே இப்படிச்சொன்னார்.
”இது பெண்கள் முகத்திற்கு ஒப்பனை செய்யும்போது பாவிப்பது”
விதி கிழிந்த குருவி பீரங்கி வாசலில் கூடு கட்டுவது என்பது இதைத்தான்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்