நடுவிரல் காட்டிய ரோஷக்காரன்

ஊரில் தங்கியிருந்போது சந்த ஒரு ரோஷக்காரன் பற்றிய கதையிது.

பசியெடுத்து ஒரு நல்லதோர் உணவகத்தினுள் புந்து கொண்ட போது நேரம் இரவு 10ஐ தாண்டியிருந்தது. கல்லாவில் இருந்த பெரியவரையும் உள்ளே இருந்த ஒருவரையும் விட வேறு எவருமிருக்கவில்லை.

முட்டைக்கொத்துக்கு ஓடர் கொடுத்தேன். வந்தது.
வேற என்னவும் வேணுமா அய்யா என்றபடி அறிமுகமாகியவரின் கதை தான் இது.
ஒரு சுகர்ப்ரீ கோக் கேட்டேன். இல்லை என்றார். குளிசை இருந்த தைரியத்தில் கோக் குடித்தடிபடியே அவரை இருக்கச் சொன்னே். எட்டி முதளாளியைப் பார்த்து பின்பு வற்புருத்தியதால் உட்கார்ந்தார்.

ஊர், பெயர், தொழில் விசாரித்தார். நானும் விசாரித்தேன். அந்தத் தம்பி ஒரு ரோஷக்காரன் என்பது மட்டும் புரிந்தது.

வீட்டுக் கஸ்டத்தினால் ”டுபாய்” போய் ஒரு நட்சத்திர விடுதியில் சிப்பந்தியாக பணி புரிந்திருக்கிறார். உழைப்பினால் பதிவியுயர்வும் கிடைத்திருக்கிறது. தலைமைச் சிப்பந்தியாய். கையில் காசும் சேர அக்காவுகக்கு கலியாணமும் செய்து வைத்திருக்கிறார். இந்த நேரத்தில் தான் விதி விளையாடியிருக்கிறது ”ரோஷத்தின்” உருவில்.

விடுதிக்கு புதிதாய் ஒரு பெண் குடிவந்தாளாம் ஒரு நாள். 6 மாடியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறாள். அந்த விடுதியில் ”லிப்ட்” அன்று பழுதடைந்திருக்கிறது. அவளின் அறையை சுத்தம் செய்ய இவர் போக அவள் பிறகு வா என்றிருக்கிறார். இவரும் சற்று நேரத்தின் பின் போக மீண்டும் பிறகு வா என்றிருக்கிறாள் . இப்படி மதியம் வரை நாலைந்து தடவைகள் சொன்ன பின் இவரும் சளைக்காமல் ‌கடைசித் தரம் போன போது மீண்டும் பிறகு வா என்றிருக்கிறாள். தம்பி, நிதானத்தை காற்றில் விட்டு எத்தனை தரம் என்னை அலைக்கழிக்கிறாய் நான் 6 மாடியும் ஏறி இறங்குகிறேன் என்றிருக்கிறார் சற்று சூடாக. அவள் சொன்னால் செய் என்ற போது கொஞ்சமாய் இருந்த நிதானத்தையும் காற்றி விட்ட தம்பி அவளுக்கு நடுவிரலை காட்டிவிட்டு வலு கூலாக திரும்பியிருக்கிறார்.

தான் விரலைக்காட்டியது தலைமை ஊழியரின் கள்ளக் காதலிக்கு என்று அந்தத் தம்பிக்கு புரியும் போது தலைக்கு மேல் வெள்ளம் போயிருந்ததாம். அவளிடம் மன்னிப்புக் கேட்டால் பதவியறக்கத்துடன் முடிந்திருக்குமாம், ஆனால் தான் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதாகச் சொன்னார்.

வேலைநீக்கம், விசா ரத்து என்று தொடங்கி 1 மாதத்துக்குள் ஊர் வந்தாராம். வேறு வேலை கிடைக்காததால் இந்த  உணவகத்தில் தொழில் புரிகிறார் என்றார்.

ஏன்டாப்பா உன்ட ரோஷத்தை அடக்கியிருந்திருக்கலாமே என்ற போது... மனிசனை மதிக்காதவனுக்கு என்னத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கேட்டார் என்னை?

என்னிடம் பதில் இருக்கவில்லை. ஆனால் அந்தத் தம்பி எனக்கு எதையோ போதித்ததை மட்டும் நன்கு உணர்ந்து கொண்டேன்.

வெளிக்கிட்டபோது தூய்மையாய் சிரித்து வழியனுப்பினார். கைகலுக்கி வெளியில் வந்தேன்.  மனம் நீயென்றால் இப்படிச் செய்வாயா என்று என்னைக் கேள்வி கேட்கத் தொடங்கியிருந்தது.

இன்றைய நாளும் நல்லதே.

.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்