பூலான்தேவியின் லிப்ஸ்டிக்

இன்று ஒஸ்லோவில் கடும் வெய்யில். நானே சற்றுக் கருகிவிட்டேன் என்றால் பாருங்களேன்.
நண்பரின் குடும்பத்துடன் ராஜேஸ்வைத்தியாவின் இசைநிகழ்வுக்கு சென்றுகொண்டிருந்தேன்.
கால் முறிந்து நாலுகாலாகிவிட்ட எனக்கு முன் இருக்கை. பின்னால் ஒரு பதின்ம வயதுப் பூலான்தேவியுடன் நண்பரின் பூலாந்தேவியும், ஒரு 6 வயதுக் கொள்ளைக்காரனும் உட்கார்ந்திருந்தார்கள்.
வாகனம் காற்றைக் கிழித்துக்கொண்டிருந்தது. நண்பருக்கு ஐஸ்கிறீம் தாகமெடுத்தது. என்னிடம் சைகையால் கேட்டார். நான் கண்களால் சம்மதித்து புன்னகைத்தேன்.
வாகனத்தை வீதியருகே இருந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தினுள் நிறுத்தி, 5 ஐஸ்கிறீம்களுடன் வந்தார், நண்பர்.
'ஏனப்பா 5 வாங்கினீங்க' என்றார் நண்பரின் பூலான்தேவிகுரல் சூடாக இருந்தது.
'உனக்கு, மகளுக்கு, மகனுக்கு, இந்த நாலுகால் மனிசனுக்கு, எனக்கு' என்றார் நண்பர், அப்பவியாய்.
'எனக்கு வேணாம்' என்றாள் பதின்மவயதுப் பயஙகரவாதி அலட்சியமான குரலில்.
'ஏன்?' என்றார் நண்பர் கடுப்பான குரலில்.
'லிப்ஸ்டிக் அழிந்துவிடும்' என்றாள் அவள்.
நண்பரின் கடுப்பு ஆத்திரமாக மாற, அவர் பல்லை நெருமிக்கொண்டு 'உனக்கென்ன பிரச்சனை?' என்றார் தனது பூலான்தேவியிடம்.
அவர் அங்கும் இங்கும் பார்த்தபடியே முழுசினார். நண்பரின் ஆத்திரம் எல்லை கடந்தது. ..... ..... (தணிக்கை)
பயந்துபோன பூலான்தேவி பயந்து பயந்து இப்படிச் சொன்னார்.
'லிப்ஸ்டிக்'
டேய், எனக்கும் சின்னவனுக்கும் இரண்டு இரண்டு ஐஸ்கிறீம். உனக்கு ஒன்று என்று பிரச்சனையைத் தீர்த்தேன், நான்.
மாமா, give me five என்றான் கொள்ளைக்காரன்.
'செத்த கிளிக்கு கூடு எதற்கு' என்று நண்பன் கூறிய திருக்குறள், பூலான் தேவியின் காதில் விழாதிருந்திருக்கக்கடவதாக.
நண்பன் சொந்த வீட்டில் அகதியாகாமல் இருக்க என்னப்பன் ஒஸ்லோ முருகன் அருள்புரியவேண்டும்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்