டேய் கிழவா...உனக்கு 50 வயதாகிறது



அப்பாவின் அழகிய ராட்சசியிடம் இருந்து சில நாட்களாக சத்தமே இல்லை. இதை நான் உணர்ந்தபோது 2 - 3 நாட்களாகியிருந்தன.

நேற்று தொ(ல்)லை பேசியை இயக்கினேன். எனது அழைப்பு நோர்வேயைகடந்து செல்வதற்கு முன்னான வேகத்தில்ஹலோகிழவியிடம் இருந்து என்று பதில் வந்தது. வழமையாக 10 - 15 ரிங் அடித்தபின்னரே பதில் வரும்.

என்டா இது கிழவி இன்று இவ்வளவு உசாராக இருக்கிறாளே என்று சிந்தித்தேன்.

எங்கள் உரையாடல் தொடர்கிறது....

அம்மாவின் முதல் கேள்வி

ராசா.. சாப்பிட்டியா, என்ன சாப்பிப்பிட்டாய், சமைத்தாயா?”
அவருக்கான எனது பதில்:
ம்......... பாண் ........ நான் என்ன பேக்கறியா வைத்திருக்கிருக்கிறேன் .. பாண் செய்ய?”
டேய் கிழவா...உனக்கு 50 வயதாகிறது .. வயதுக்கேற்ற மாதிரி கதை. பெரியவர்களை மதிக்கப் பழகுடா
என்னடா இது ஆத்தா இன்று பயங்கர உசாராக இருக்கறாரே என்று யோசித்தேன்.
அவரே தொடர்ந்தார்...
மகளின் படங்கள் அனுப்புவதாகச் சொன்னாயே .. இதவரை அனுப்பவில்லை நீ
அம்மா, அவளின் (மருமகள்) facebook க்கு அனுப்பியிருக்கிறேன். அவளிடம் கேளுங்கள்

இப்போதும் என்னது... அம்மா இன்று இத்தனை உசாராகவும், மறதித்தன்மை இல்லாமலும் இருக்கிறாரே என்று மீண்டும் சிந்தனையோடியது.

பின்பு வந்த உரையாடலிலும் அம்மா மிகவும் தெளிவாகவும் .. ஒரு துள்ளலான மனநிலையிலும் இருந்தார். எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது.

இன்று மீண்டும் தொலைபேசியைத் தட்டினேன்.

அதே உற்சாகத்துடன் இருந்தாள் கிழவி. எனக்கு ஆச்சர்மாக இருந்தது. நாம் உரையாடிக்கொண்டிருந்தோம்.

தங்கச்சி கதைத்தவளா?”

ஓம்

தம்பி ... எடுத்தவனா? எடுத்திருக்கமாட்டானே அந்தக் குரங்கு... அவனுக்கு விசர்... சாமிப்பைத்தியம் பிடித்து அலையுறான். பைத்தியம்என்றபோது ......

அவன் நல்லவன். உன்னைமாதிரி விசர்க் கதை கதைக்தை கதைக்கமாட்டான். அவன் ஏன் எடுக்கவேணும். அவன் குடும்பத்தோட இங்க வந்திருக்கிறான். அவன் வந்து 3 - 4 நாட்கிறது. மதுரா வளர்ந்திருக்கிறாள். சின்னவன் என்னை இப்பவும் சோதி.. சோதி என்றுதான் கூப்பிடுகிறான். எனக்கு மாம்பழம் வாங்கிக்கொண்டுவந்தாள் மதுரா. உயர்ந்திருக்கிறாள். (குரலில் பெரும் புழுகமும் துள்ளலும் தெரிகிறது)
அவரே தொடர்கிறார்....

சின்னன்களுக்கு நான் முறுக்கு சுடவேணும். நீ சும்மா அலட்டாம டெலிபோனை வை.
??????????
அடியேய் கிழவி ..... உனது உசாருக்கு இதுதானா காரணம்? அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை எனக்கு நேற்றே கூறியிருக்காலாமேயடி.

இருடீ ... அவர்கள் போகட்டும் வச்சுகிறன் கச்சேரியை...

என்ட ஒஸ்லோ முருகா... இப்போது உனக்கு மட்டுமல்ல திருவிழா, கிழவிக்கும் இப்போது திருவிழாதான்

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்