சேக்ஸ்பியரின் மொழியும் திருவள்ளுவரின் மொழியும்

இன்று ஒஸ்லோவில் மழை சிணுங்கியபடியே இருந்தது: வீதி திருத்தவேலை என்பதால் ஒஸ்லோவுக்குள் வாகனநெரிசல் அதிகம் என்று எச்சரித்திருந்தார்கள்.

ஒஸ்லோவில் எனக்கு நான்கு மணிக்கு கற்பித்தல் இருந்தது. ஒருவிதமக 3.55க்கு வாகனத்தை நிறுத்திவிட்டு மழை பெய்துகொண்டிந்ததால் உள்ளே ஓடுகிறேன்.

கட்டடத்தின் வாசலில் ஒரு சீக்கியர் அவருக்கேயுரிய தலைபாகையுடன் நிற்பது தெரிகிறது.


அவரைக் கடந்துகொண்டிருக்கும்போது குறுக்கே கையைப்போட்டார்.

எனது ஓட்டத்தை நிறுத்தி ”எனக்கு வகுப்பு இருக்கிறது” கதைக்க நேரமில்லை என்றேன் நோர்வேஜிய மொழியில்.

அந்த மனிதரோ என்னைப் பார்த்து ”வணக்கம்” என்று திருவள்ளுவரின் மொழியில் கூறினார்.

”வணக்கம்” என்றேன் நானும் திருவள்ளுவரின் மொழியில்.

இப்போது அவர் சேக்ஸ்பியரின் மொழியை கையில் எடுத்து இப்படிச் சொன்னார்.

"My friend! You have happy life and beautiful wife. You will get a new baby soon. My friend, This is what god says through me". என்றார்.

”மவனே .. beautiful wife மட்டும் என்றாலும் அவனை மன்னிக்கலாம். ஆனால் குழந்தைவேறு கிடைக்கு என்கிறானே என்று நினைத்தபோது எனக்கு உள்ளங்காலில் இருந்து உச்சிவரை கடுப்பு ஏறியது.

அவனைப் பார்த்து ”realy” ஆச்சர்யமாக குரலில் என்றேன்.

அவரின் கண்களில் ”மீன் மாட்டிவிட்டது” என்ற மகிழ்ச்சி மின்னி மறைந்தது.

”My friend, you live in norway meny years?"

"25"

"Good good My friend. you work where?"

பவ்வியமான ஒரு சிரிப்பை எடுத்துவிட்டபடி " I work as Police chief, see my ID card " என்று விட்டு எனது சாரதி பத்திரத்தைக் காட்டினேன்.

”Ok.. Chief! You go... I am going home" என்றுவிட்டு திரும்பிப்பார்க்காலே நடந்தார் அவர்.

வகுப்பு முடிந்த பின் தேனீர் அருந்த அருகில் இருந்த தேனீர்க் கடைக்குச் சென்றேன்:

எனது சீக்கிய நண்பர் ”கடைக்கார முதலாளியிடம் ”My friend! You have happy life and beautiful wife. You will get a new baby soon. My friend, This is what god says through me".என்றுகொண்டிருந்தார்.

”தம்பி! ஒரு இஞ்சி பிளேன் டீ” என்று கடை முதலாளியிடம் கூறியதைக் கேட்டுத் திரும்பினார் நமது நண்பர்.

திரும்பியவர் முகம் கறுத்துப்போனது. கடைக்காரிடம் ”My friend, I go" என்று நடையைக் கட்டினார்.

என்ட ஒஸ்லோ முருகா, ஒரு சாரதி பத்திரத்திற்கு இவ்வளவு மகிமையா?

பி.கு:

Veitvet senterக்குள் உலாவும் நண்பர்களே.. ஜாக்கிரதை!!
தேவை எனின் நீங்களும் நோர்வேயின் இராணுவத்தளபதி ஆகலாம்.
தப்பே இல்லை.

02.06.2015

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்