ஒஸ்லோ முருகன் இரவு கனவில் வந்தார்



எனது ஒஸ்லோ முருகன் இரவு கனவில் வந்தார்.  

நான் இந்த முறை திருவிழாவிற்கு ஒருநாளேனும் செல்லததைப்பற்றி கதைக்கவே வந்திருக்கிறான் என்று நான் பயந்துபோனேன். ஆனால் அதுவல்ல பிரச்சனை.

முருகனின் அந்தப்புறத்தில் கடும் பிரச்சனையாம். இரண்டு வீடும் முருகனை வெளியே கலைத்துவிட்டார்களாம்.திருவிழா தொடங்கிய நாளில் இருந்து பழனி மலையடிவாரத்தில் தனியே குந்தியிருந்தாராம் என்றார் கடும் சோகத்தில்.

ஏனய்யா .. என்ன பிரச்சனை. இத்தனை வருடமாக இரண்டையும் சமாளித்தாயே. திடீர் என்று என்ன பிரச்சனை? பக்குவமாக கையாண்டிருக்கலாமே.... என்றேன் ஒரு அந்தப்புறமும் இல்லாத நான்.

அதையேன் கேட்கிறாய்... திருவிழாவிற்கு வந்த பெண்கள் அணிந்திருந்த புடவை, நகைகளைக் கண்ட வள்ளியும் தெய்வானையும் தங்களுக்கும் இந்த வருடம் பிரபலமாக இருந்த டிசைன் புடவைகள் வேணும் என்கிறார்கள்

எனக்குவடிவேலுவின் ஆஹாமனதுக்குள் கேட்டது....

இப்போ என்ன செய்யப்போகிறாய்?” என்றேன்.

புடவைகளை தமிழ்நாட்டில் வாங்கிவிடலாம். ஆனால் பிளவுஸ் தான் பிரச்சனைஎன்று அங்கலாய்த்தார்.

அதையும் அங்கேயே வாங்கிவிடேலாமேஎன்றேன்.

அங்கு தான் பிரச்சனை இருக்கிறது. ”இரண்டு வீடும் தமக்கு ஒஸ்லோ முருகன்கோயிலுக்குச் சென்ற பெண்கள் அணிந்திருந்த டிசைன்களில் பிளவுஸ் தைக்கவேண்டுமாம். உனக்கு ஒஸ்லோவில் பிளவுஸ் தைக்கும் யாரையாவது தெரியுமா ?” என்றார் நண்பர் முருகன்.

ஒருவரின் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தேன்.

ஒரு நன்றிகூட சொல்லாமல் மின்னல்போன்று மறைந்துபோனார் முருகன்.
சில மணித்தியாலங்களின் பின்.........

தொலைபேசி டிங் என்று சத்தம்போட்டது.

திறந்து பார்த்தேன். இரண்டு புகைப்படங்கள் MMSல் வந்திருந்தது.
முதலாவது படத்தில் ...

முருகன் நடுவில் நிற்கிறார். வள்ளியும், தெய்வானையும் இரண்டுபக்கத்தில். வள்ளி கையில்லாத பிளவுஸ் அணிந்திருக .. தெய்வானையோ கையில் பல ஜன்னல்கள் வைத்த பிளவுஸ் அணிந்திருந்தார். முருகன் சிரித்தபடியே இருவரின் கைகளிலும் தனது கையை வைத்திருந்தார்.

இரண்டாவது படத்தில் ...

வள்ளியும் தெய்வானையும் முதுகுப்புறத்தில் மிக ஆழமாக வெட்டப்பட்ட பிளவுஸ் அணிந்திருக்க, முருகன் அவர்களது முதுகில் கைவைத்தபடி என்னை திரும்பிப்பார்த்தபடியே கண்ணடித்துக்கொண்டிருந்தார்.
நண்பேன்டா
----------------------------------------------------------------------------------------
ஒரு நண்பரின் ஒரு சிறு அங்கலாய்பைக் அடிப்படையாகக்கொண்ட புனைவு இது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்