திருநெல்வேலிக்கே அல்வா குடுத்தவன்

இதை வாசிக்க முதல் நீங்கள் கீழுள்ள கதையை வாசித்திருந்தால் மட்டுமே இக்கதையின் லொள்ளு விளங்கும்.

இத்தால் சகல சோமாலிய நாட்டவருக்கும் ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் என்னும் நான் அறியத்தருவது என்னவென்றால்





புதிய கதை தொடங்குகிறது....

சனிக்கிழமை காலை சிவனே என்று நிம்மதியாய்
படுத்தெழும்பி
மெயில் பார்த்து
ப்ளாக் வாசித்து
எழுதி
ஜாலியாக குளித்து
பிளேன் டீயை வாயில வைக்கிறன்...அடித்தது நாசமாபோன தொல்லபேசி

குரலைக் கேட்டவுடனேயே மற்றப் பக்கத்தில் கதைத்தவர் கண்முன் தெரிந்தார் (சத்தியமா சார்)
வேறு யார் இப்படி தங்கள் நாட்டு மொழியின் ஒலிகளைக் கலந்து இந்நாட்டு மொழியை வற்புணர்ச்சி செய்வது?

இவர்கள் யேமன் நாட்டுக்கு தெற்காககவும், ஏத்தியோப்பியாவுக்கும் கென்யாவுக்கும் கிழக்காகவும் இருக்கும் ஒரு நாட்டவர்கள்.. நீண்ட கடலோத்தைக்கொணட நாட்டவர்கள்

வேற மாதிரி சொன்னால் என்னை தங்கள் நாட்டவர் என்று நினைக்கும் பெருந்தன்மை நாட்டுக்காரர்.
இதவிடவா விளக்கிச் சொல்லனும்.....

பச்சையாகச் சொன்னால் சோமாலியா நாட்டவன் ஒருத்தன்.

என்னடா இது... நம்மள கண்டால் தானே கலைத்து கலைத்து கதைப்பான்கள்.. இப்ப எப்படி தொலைபேசியில் என்னைக் கண்டு பிடித்தான் என்று பலமாய் யோசித்துக் கொண்டிருந்தேன். அவனோ காதுக்கே சகிக்காத ஒலிகளுடன் எனது ஒரு காதைக் குடைந்து கொண்டு மற்ற காதுக்குள்போக முயற்சித்துக் கொண்டிருந்தான்.

நண்பா, என் நிறத்தவனே! தொலைபேசி எடுத்தால் முதலில் உன் பெயர் சொல்லி நான் தான் கதைக்கிறேன் என்றும் இன்னாருடன் கதைக்கமுடியுமா என்றும் கேட்க வேண்டும் என்பது கூட தெரியாதவனா நீ..
என்று
எனது மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

அவன் அடுத்தமுறை மூச்சு எடுப்பதற்காக சம்பாசணையை நிறுத்தும் வரை காத்திருந்தேன்... சற்றே ஓய்ந்தான்.
மை ப்ரென்ட் என்றேன்

மீண்டும் நிறுத்தாமல் தொடங்கினான். சற்று கடுமை கலந்து ”நிறுத்து” என்ற போது நிறுத்தினான்.
தயை செய்து மிக ஆறுதலாக, மெதுவாக பிரச்சனையைச் சொல் என்றேன் (எனக்கு ஓரளளவு பிரச்சனை விளங்கியிருந்தது காதில் விழுந்த ஓரிரு சொற்களால்)

சொன்னான் இப்படி

நான் ஒரு சோமாலிய நாட்டவனாம் (நமக்கு தெரியுமுல அது)
கணணி திருத்தப்பட வேண்டும் என்றான். சரி என்றேன்
என்ன பிரச்சனை என்றேன்
மை ப்ரெணட்... நோ பிக்கசர் கம்மிங் என்றான்
ம் கொட்டினேன்
யு கம் நவ் என்றான்.
சற்று யோசித்தேன்.... நமக்கும் அங்காலப்பக்கம் போற வேலை இருந்தது..
சரி இன்னும் 30 நிமிடத்தில் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு வா என்றான். சரி என்று சொல்லி
25வது நிமிடத்தில் அவனுக்கு போன் பண்ணி வந்துவிட்டேன் என்றேன். பொறு 2 நிமிடத்தில் வருகிறேன் என்றான்
2..நாலாகியது, 4 எட்டாகியது, 8 பதினாறாய் போனது. ”ஆப்ரிக்கன் டைம்” என்று ஒரு சொற்றொடர் இருக்கிறது கேள்விப்பட்டதுண்டா நீங்கள்? அதற்கு அர்த்தம் சொல்லித்தந்தது அவனின் நடவடிக்கை.

எனக்குள் எரிச்சல் குடிவந்து குரல் வழியே அவனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
காத்திருக்கிறேன் உனக்காக என்றேன் (காதலில் அல்ல)

ஒரு கடையின் பெயரைச் சொல்லி கணணி அங்கிருப்பதாகச் சொன்னான்.
அய்யா.. நீர் வந்து அதை எடுத்துத்தாரும்..தவிர உம்மிடம் பேச வேண்டியும் உள்ளது என்றேன்.

இல்லை நீ அந்த கடையில் வைத்துத்தான் கணணியைத் திருத்த வேண்டும் என்றான்.

எனக்கு கொதி வரத்தொடங்கி அது அரைவாசித்தூத்தை கடந்து கொண்டிருந்தது.

நீ வராவிட்டால் போய் விடுவேன் என்று வெருட்டினேன்
நீ காசு வாங்கியிருக்கிறாய் திருத்தியே ஆக வேண்டும் என்றான்.

வெள்ளிக்கிழமை இரவு அடித்த தண்ணி இன்னும் முறியவில்லையோ இவனுக்கு என்று யோசிக்கலானேன்.

நான் மௌனித்ததை "சம்மதம்" என்று நினைத்துவிட்டான் பாவிப்பயல்

காசு வாங்கினால் வேலை செய்து தரவேண்டியது முக்கியம் என்றான்
அத்துடன் கடந்த ஒரு வாரமாக எனக்காக காத்திருக்கிறானாம் என்றும் ஒரு போடு போட்டான்..

தலை சுற்றத் தொடங்கியிருந்தது எனக்கு.
நண்பரே! நீங்கள்சொல்வது எதுவும் எனககுப் புரியவில்லை. எதற்கும் நீங்கள் சொல்லும் கடைக்கு வாருங்கள் பேசித்தீர்ப்போம் என்றேன்.

நீ அங்கு போய் கடை முதலாளியை என்னுடன் பேசச் சொல் என்றான் (நம்மள பார்த்தா எல்லாருக்கும் இளிச்சவாயனா தெரியுது போல)

சரி என்று கடைக்குப் போய் இங்கு இரண்டு (ஒன்றல்ல இரண்டு) கணணிகள் இருப்பதாகவும், அவை எங்கிருக்கின்றன என்றும் கேட்டேன். அந்தக் கடை ஒருசோமாலியன் கொமினிகேசன் சென்டர். கடை முழுவதும் நிறைந்திருந்த என்நிறத்தவர்கள் யார் இந்த புதிய உறவு என்று என்னை அளவெடுத்துக் கொண்டிருந்தார்கள். புன்னகையை அன்பளிப்பாய் கொடுத்துக் கொண்டிருந்தேன் அவர்களுக்கு நான்..

கடைக்காரன் என்னை ஏற இறங்கப் பார்த்து வாயைப் பிதுக்கினான்.

இல்ல ராஜா... இங்க ரெண்டு கொம்பியூட்டர் இருக்கு என்றுசொல்லி நிமிர்ந்த போது அவனின் மேசையில் எனது விசிட்டிங் கார்ட் இருந்தது. (முன்பு ஒரு நாள் நான் (இப்ராஹீம்) ஒரு உண்மையான சோமாலிய ஜீவனிடம் சில விசிட்டிங் காட்ஜ கொடுத்து உங்கள் நாட்டு கடைகளில் வைத்துவிடு என்றது நினைவில் வந்தது. (இப்ராஹீம் சொன்னதை நீ செய்ததற்காய் உன்னை வணங்குகிறேன்.ஆயிரத்தில் ஒருவனய்யா நீ)

விசிட்டிங் கார்ட்ஜ காட்டி இது நான் தான் என்றேன்... அது யாராய் இருந்தால் என்ன இருந்துவிட்டு போ என்பது போல் பார்த்தான் என்னை.

எரிச்சல் உச்சியை பிளக்க... போன் பண்ணினேன் முதலாமவனுக்கு. நான் கடையில் நிற்பதாயும் முதலாளியுடன் நீயே கதைத்துக்கொள் என்று சொல்லி முதலாளியிடம் தெலைபேசியைக் கொடுத்தேன். இரண்டு சேவல்கள் மோதிக்கொண்டன போலிருந்தது அவர்களின் மொழி. ஐந்து நிமிடத்தின் பின் ”பக் யூ மான்” என்று அவனுக்குச் சொல்லி தொலைபேசியை என்னிடம் நீட்டியவன்

எரிச்சலில் தலையை வலது இடது பக்கம் என ஆட்டியவன் நொர்வேஜிய மொழியில் அவன் விசரன் என்று சொல்லி தொலைசியைத் தந்தான். (அண்ணண் வடிவேலு காதுக்குள் "ஆகா" என்று சொன்னது மாதிரி இருந்தது எனக்கு)

தொலைபேசி அடங்கப்போயிருந்தது மறுபக்கத்தில்.

கடை முதலாளி பேசத் தொடங்கினார். (கவனமாய் கேட்டுக் கொள்ளுங்கள் அவர் சொல்வதை.. எனக்கு நாலைந்து தரம் ஒரு விடயத்தை கதைப்பது பிடிக்காது)

நண்பரே! என்றான்என்னைப் பார்த்து (புன்னகைக்கிறேன் நான்)
உட்காருங்கள்என்றான் (உட்கர்ந்தேன்)

உங்களுக்கு போன் போட்டவர் தமது நாட்டவர் என்றார்; (அது தான் நமக்கு நல்லாவே தெரியுமே)
தனது கடையில் ஒரு ப்ராடு மனிதர் கடந்த ஒரு வாரமாக வேலை பார்த்ததாயும். தான் தற்போது அவரைத் தேடிவருவதாயும் சொன்னார் (அண்ணண் வடிவேலு மீண்டும் காதுக்குள் "ஆகா" சொல்லிப் போனார்)

அவன் உங்களோடு தொலைபேசியில் பேசியவனிடம் 2 கணணி திருத்தித் தருவதாக 500 குறோணர்கள் வாங்கிவிட்டு உங்கள் தொலைபேசி இலக்கத்தை குடுத்து இவரிடம் தொடர்புகொள் என்றிருக்கிறான். அத்துடன் கணணியை கடையில் வைத்துத்த்தான் திருத்துவதாகவும் நம்பிப்கையூட்டியிருக்கிறான். தற்போது அவரின் இரண்டு கணணிகளுடனும் இன்னும் சில பல பொருட்களுடனும் ஆள் மாயமாய் மறைந்து விட்டான் என்றார்..
(நம்ம வடிவேலண்ணண் எனது தோளில் கைபோட்டு தம்பீ!”ரொம்ப பீல்” பண்ணுறீங்களா என்றார்)

எனக்கு அவனின் சாதூர்யம் சிரிப்பதைத்தந்திருந்தது. மற்றவனின் மேலிருந்த கோபம் போய் பரிதாபம் ஏற்பட்டது.. கணணி திருத்தப் போய் தனது 2 கணணிகளையும் இழந்து, காசையும் இழந்து ...... கொடுமடா சாமி.

சிவா என்றொரு குசும்புக்கார நணபர் ஒருவர் இருந்தார் எனக்கு (இப்ப அவர் எமனிடம் குசும்பு பண்ணுகிறார்). அவர் அடிக்கடி சொல்லும் ஒரு சொற்றொடர் ஞாபகத்தில் வந்தது அப்போது ”விதி கிழிந்த குருவி பீரங்கி வாசல்ல கூடு கட்டிச்சாம்” என்பது தான் அது. (குருவியின் நிலையை போசித்துப் பாருங்கள் மிச்சம் தானே புரியும்) நம்ம சிவாவைப்பற்றி வாசிக்க இங்க போங்கள்.

அடுத்து கடைக்காரனிpன் நிலையை யோசித்துப் பார்த்தேன்.
நாளைக்கு கணணியை திருத்தக் கொடுததவன் உன்னிடம் தந்த கணணிகளைத் திருப்பித் தா என்று கேட்டால்....அல்லாவே!
(எடுத்திட்டு ஓடினவன் ரிசீட் வேற கொடுத்தானாம்... தெய்வமய்யா அவன்)... நம்மள விட நொந்து நூலாப் போனவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் போலிருக்கிறது இந்தப் பூலோகத்தில்.

ஒரு குறுஞ்செய்தியில் எனக்கு ஒரு கடைகளுடனும் கணணி திருத்தும் ஒப்பந்தம் இல்லை என்றும் தேவை எனின் நேரில் தொடர்பு கொள் என்றும் எழுதி அனுப்பினேன் முதலாமவனுக்கு. பதிலே வரவில்லை சகோதரத்திடமிருந்து..
நொந்த மனதுதல்லவா அது...

திருநெல்வேலிக்கே அல்வா குடுத்தவனை தேடுகிறேன்.. சிஸ்யனாய் சேர்த்துக் கொள் தலிவா என்று கேட்பதற்காய்..
கண்டால் சொல்லியனுப்புங்கள்.

பி.கு. ஆனால் முக்கியமானது:
பலர் வந்து போகிறீர்கள் எனது ப்ளாக் பார்க்க.. மிக்க மகிழ்ச்சி.
திரும்பிப் போகும் போது ஒரு கொமன்ட் அடிச்சிட்டு போறது (பயங்கரமா தண்ணி அடிக்கிறீங்க.. ஆனா ஒரு கொமன்ட் அடிக்க மாட்டென்கிறீர்கள்.. நியாயமா இது? அண்ணண் வடிவேலு இப்படிச் சொல்லச் சொன்னார்... வெர்ர்ர்ரி பாட்.

அன்புடன்
இந்த சோமாலிய நாட்டு நண்பர்களால் தொடந்தும்
இம்சைக்குள்ளாக்கப்படும்
City Of ஏறாவர் ஐச் சேர்ந்த
சஞ்சயன்

.

5 comments:

  1. நல்லாத்தான் இருக்கு உங்க கதை... தொடருங்கள் நண்பரே

    ReplyDelete
  2. ஆகா... கொமன்ட் அடிச்சிட்டாங்களே.. இனி நீங்க தண்ணியும் அடிக்கலாம் மிஸ்டர் LK

    ReplyDelete
  3. ஏறாவூர் எண்டு சொல்லியும் பிரச்சனை குடுத்தவங்களோ உந்த சோமாலியன்கள் அண்ணை?

    ReplyDelete
  4. நோ கொமன்ட்ஸ்...இது எப்பூடீ?

    ReplyDelete
  5. நண்பர் சஞ்சயன்,
    சோமாலியா நாட்டவனே பார்த்தவுடன் எங்க திருநெல்வேலி அல்வா வாங்கி சாப்பிட கொடுங்கோ.வடிவேல் மாதிரி ஓடிடுவான்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்