முடிந்தது விசரனின் வாரம்

விசரனுக்கென ஒதுக்கப்பட்ட வாரம் இன்றுடன் முடிகிறது. உங்களுக்கும் இந்த விசரினின் பினாத்தல்களை கேட்டு அலுத்திருக்கும். அன்பாய் பொறுமைகாத்ததற்கு என் நன்றிகள். முக்கியமாய் எனது நீண்ண்ண்ண்ட சுயவிபரக் கோர்வைரயை வாசித்தவர்களுக்கு. தமிழ்மணத்தின் சரித்திரத்திலேயே இவ்வளவு நீளமாய் சுயவிபரக்கோர்வை எழுதியவன் இந்த விசரனாய்த்தான் இருக்கும்...

இந்த ஒரு கிழமையும் புதியதோர் அனுபவத்தில் திழைத்திருக்க வாய்ப்புத்தந்த தமிழ்மணத்தாருக்கு எனது நன்றிகள்.

பலரின் புதிய அறிமுகங்களும், பாராட்டுகளும் கிடைத்திருக்கின்றன. மகிழ்ச்சி. நம்ம பக்கத்துக்கு ஒரு நாளைக்கு நாலைந்து பேர் வந்து போவதே பெரியகாரியமாயிருந்த நேரத்தில் திடீர் என 500 பேர் வந்து போனதற்கான தடயங்களை அதிகரித்த வாசகர் எண்ணிக்கை காட்டுகிறது. எல்லாப் புகழும் தமிழ் மணத்திற்கே.

 அதிகரித்த வேலைப்பழுவினால் எழுதுவதற்கு நேரமொதுக்கவும் முடியவில்லை. தவிர எழுதக் குந்தியவுடன் எழுத்தும் வழிந்தோடி வருவதில்லை எனக்கு. ஏதோ ‌எழுதும் சக்தி தேங்கிப்போய்விட்டது போலிருக்கிறது. முன்பும் இப்படி உணர்ந்திருக்கிறேன் ஆனால் அது காலப்போக்கில் சரியாகிவிட்டது. இதுவும் அப்படித்தானிருக்கும்.

இந்தக் கிழமை வந்து போனது போல இனியும் வந்து போவீர்கள் என்னும் நம்பிக்கையில்..


மிக்க நன்றியுடன்
விசரன்

வாழ்க தமிழ்

.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்